உன்மத்த சிறுக்கியவள்
ஒய்யார அழகியே
உன்மத்த சிறுக்கியே
கண்டாங்கி புடவைகட்டி
எனை களவு கொண்டவளே
ஓரக்கண் பார்வையால
உயிருக்குள் உறைஞ்சவளே
உன் வனப்ப பார்த்துவிட்டால்
கற்சிலையும் சிலாக்கிகுமடி
உன் கண்ணழகை கண்டுவிட்டால்
கயல்கூட நாணுமடி
நீ வச்ச பூவுக்கு
விலைமதிப்பே இல்லையடி
நீ தீண்டாத பூவெல்லாம்
தற்கொலைக்கு துடிக்குதடி
நீ தொடுத்த பூச்சரங்கள்
சாகாவரம் பெற்றதடி
உன் கை பட்டதால
கதவு கம்பி நெகிழுதடி
கட்டுப்பாட்ட இழந்த குதிரையாட்டம்
மனசு கண்டபடி கற்பனையில் குதிக்குதடி
இதுவரைக்கும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த
என் கற்புநெறி தகருதடி
காதலோடு உனைபார்த்தால்
ஆயிரமாயிரம் கவிதை கொட்டும்
திரையில் நீ தோன்றினால் போதும்
அழகுக்கென்று ஒர் ஆஸ்கார் விருது
உன் வீட்டு கதவை தட்டும்
கடவுள் என் எதிரில் வந்தால்
உன் கொண்டையில ஒரு பூவாகவோ
கொசுவலத்துல ஒரு மடிப்பாகவோ
காது லோலாக்கில ஒரு மணியாகவோ
உடனே மாற வரம் கேட்பேன்
தர மறுத்தால்
வாளெடுத்து அவனோட மல்லுக்கு நிற்பேன்..